இலக்கணம் கற்போம்…. பிழைகளைத் தவிர்ப்போம் – தொடர் _நாள் 17
பதினேழு நண்பா…. வினையெச்சம் குறித்து நேற்றுப் பார்த்தவை நினைவில் இருக்கின்றதா…? இல்லையெனில் மீண்டும் நினைவுபடுத்திக்கொள். இன்றைக்குப் பார்க்கப்போகும் மூன்று விதிகளும், நேற்றைய பாடத்தின் அடிப்படையில் அமைந்தவைதான். வா …..வலிமிகலின் அடுத்த விதிகளைக் காண்போம். விதி 20: இகரத்தில் முடியும் வினையெச்சங்களை அடுத்து வல்லினம் மிகும் எ.கா.: ஓடிப்போனான் ஓடி என்பது வினையெச்சச் சொல் ஆகும். இது ‘இ’ (ட்+இ = டி) யில் முடிந்துள்ளதால் இங்கே வல்லினம் மிகும். விதி 21: உகரத்தில் முடியும் வினையெச்சங்கள் வன்றொடர்க் குற்றியலுகரமாக இருந்தால் மட்டும் வல்லினம் மிகும் எ.கா.: கேட்டுக்கொண்டான் கேட்டு என்பது வினையெச்சச்சொல் என்பதனை அறிவோம். அது என்ன வன்றொடர்க் குற்றியலுகரம் என்பதுதானே உன் கேள்வி நண்பா….? குற்றியலுகரம் பற்றி ஆறாம் நாள் பாடத்தில் படித்தோமே நினைவில் உள்ளதா..? ஆம்… குறுமை + இயல் + உகரம். அதாவது குறுகிய ஓசையினை உடைய உகரம். சரிதானே.. இந்தக் குற்றியலுகரமானத...