Posts

Showing posts from July, 2020

இலக்கணம் கற்போம்…. பிழைகளைத் தவிர்ப்போம் – தொடர் _நாள் 17

பதினேழு நண்பா…. வினையெச்சம் குறித்து நேற்றுப் பார்த்தவை நினைவில் இருக்கின்றதா…? இல்லையெனில் மீண்டும் நினைவுபடுத்திக்கொள். இன்றைக்குப் பார்க்கப்போகும் மூன்று விதிகளும், நேற்றைய பாடத்தின் அடிப்படையில் அமைந்தவைதான். வா …..வலிமிகலின் அடுத்த விதிகளைக் காண்போம். விதி 20:   இகரத்தில் முடியும் வினையெச்சங்களை அடுத்து வல்லினம் மிகும்       எ.கா.: ஓடிப்போனான்        ஓடி என்பது வினையெச்சச் சொல் ஆகும். இது ‘இ’ (ட்+இ = டி) யில் முடிந்துள்ளதால் இங்கே வல்லினம் மிகும். விதி 21: உகரத்தில் முடியும் வினையெச்சங்கள் வன்றொடர்க் குற்றியலுகரமாக இருந்தால் மட்டும் வல்லினம் மிகும்      எ.கா.: கேட்டுக்கொண்டான்       கேட்டு என்பது வினையெச்சச்சொல் என்பதனை அறிவோம். அது என்ன வன்றொடர்க் குற்றியலுகரம் என்பதுதானே உன் கேள்வி நண்பா….? குற்றியலுகரம் பற்றி ஆறாம் நாள் பாடத்தில் படித்தோமே நினைவில் உள்ளதா..? ஆம்… குறுமை + இயல் + உகரம். அதாவது குறுகிய ஓசையினை உடைய உகரம். சரிதானே.. இந்தக் குற்றியலுகரமானது இறுதி எழுத்துக்கு முன்னால் வரும் எழுத்தினைப் பொருத்து ஆறு விதமாகப் (நெடில் தொடர், ஆய்தத்தொடர், உயிர்தொ

Emotional intelligence

உணர்வுசார் நுண்ணறிவு இதனை ஆங்கிலத்தில் EMOTIONAL INTELLIGENCE என்பார்கள்.  நாளைக்கு ஒரு தேர்வு இருக்கும். அதே நேரத்தில் இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும். கிரிக்கெட் பார்ப்பதா… தேர்வுக்குப் படிப்பதா…? கிரிக்கெட் பார்க்கும் ஆசை ஜெயித்தால் தேர்வு கோவிந்தா…… உணர்வினைக் கட்டுப்படுத்தும் திறன் இல்லாததால் கிடைக்கும் தோல்வி. இன்னொரு உதாரணம் பார்ப்போம். குமார் ஒரு கடின உழைப்பாளி. மாதாமாதம் எப்படியாவது விற்பனை இலக்கை அடைந்து விடுவான். அவன் மேலாளர் அவனை விடச் சின்ன பையன், அவனிடம் திட்டு வாங்கி விடக்கூடாது என்ற கவனமும் ஒரு காரணம்.  ஒரு மாதம் வீட்டில் பிரச்சினை. விற்பனையில் கவனம் செலுத்தவில்லை. விற்பனை மிகவும் குறைந்து போயிற்று. அந்த மாதத்தின் ஊழியர்கள் சந்திப்பில் மேலாளர் குமாரைத் திட்ட ஆரம்பித்து விட்டார். அவருக்கு நல்லதொரு பணியாளன் இப்படி ஆகிவிட்டானே என்று வருத்தம். ஆகவே கொஞ்சம் அதிகமாகவே திட்ட ஆரம்பித்து விட்டார்.  குமாருக்கு வீட்டுப் பிரச்சினை ஒரு புறம். தன்னை விட வயதில் குறைந்தவனிடம் திட்டு வாங்குவது ஒரு புறம். இவையெல்லாம் சேர்ந்து கொதிப்பினை ஏற்படுத்த, எழுந

இலக்கணம் கற்போம்…. பிழைகளைத் தவிர்ப்போம் – தொடர் _ நாள் 16

பதினாறு என்ன நண்பா நலம்தானே…. வலி மிகுதலின் அடுத்தடுத்த விதிகளைப் பார்க்கத் தயாராகி விட்டாயா…? அவற்றைப் பார்க்கச் செல்லும் முன் இன்றைக்கு இன்னும் சில புதிய பொருள்களைக் கற்றுக்கொள்ளலாம் நண்பா. அதன்பின்னே மீதம் உள்ள விதிகளைப் பார்ப்போம். இன்றைக்கு வினையெச்சம் என்பது குறித்துப் பார்த்துவிடலாம். முதலில் வினைச்சொல் என்றால் என்ன …? ஒரு செயலைக்குறிக்கும் சொல் வினைச்சொல் … சரிதானே… அதாவது ஒன்றன் தொழிலை உணர்த்தி, காலத்தைக் காட்டி நிற்கும் சொல் வினைச்சொல் எனப்படும். இதனை முற்றுவினை, எச்சவினை என இரண்டாகப் பிரிக்கலாம். ஒரு தொழிலைக் குறித்து வந்து முற்றுப்பெற்ற சொல் முற்றுவினை எனப்படும் எ.கா.: எழுதினான் முழுமையாக முடிவுறாமல் நிற்கும் வினைச்சொல்லானது எச்சவினை எனப்படும். எ.கா.: படித்த. புரிந்ததா….? இப்போது இந்த எச்சவினையை மேலும் இரண்டாகப் பிரிக்கலாம். அவை வினையெச்சம், பெயரெச்சம். முடிவுறாமல் நிற்கும் இந்த எச்சவினையானது ஒரு வினையைக் கொண்டு முடியும் படி அமைந்திருந்தால் அது வினையெச்சம். எ.கா.: வந்து போனான் இங்கே, வந்து என்ற எச்சவினையானது போனான் என்ற வினைச்சொல்லினைக

இலக்கணம் கற்போம்…. பிழைகளைத் தவிர்ப்போம் – தொடர் _ நாள் 15

பதினைந்து வா நண்பா…. கடந்த சில நாட்களாக நாம் பார்த்துக்கொண்டிருக்கும் வலி மிகல் விதிகளில் சுலபமான இன்னும் இரண்டு விதிகளை இன்று பார்த்துவிடலாம். விதி 18: உவமைத் தொகையில் வல்லினம் மிகும்           எ.கா.: மலர்ப்பாதம் விதி 19: உருவகத்தில் வல்லினம் மிகும்           எ.கா.: தமிழ்த்தாய் அது என்ன உவமை மற்றும் உருவகம் என்று கேட்காதே…. அடுத்து அதற்குத்தான் வருகின்றேன். நேற்று நாம் இருவரும் உணவு உண்டு கொண்டிருக்கும் வேளையில் நீ என்ன சொன்னாய்   என்று நினைவில் இருக்கின்றதா….? “பூ போல இட்லி இருக்கு…” அதாவது இட்லியின் மென்மைத்தன்மையைக் காட்டுவதற்காக பூவினை ஒப்பிட்டுக்கூறினாய் அல்லவா…. அதுதான் உவமை நண்பா… போல என்ற சொல்லினை பயன்படுத்தினாயே, அதனை உவம உருபு என்போம். தமிழில் உள்ள உவம உருபுகளைக் கீழே கூறியுள்ளேன். அவற்றையும் உன் அறிவினை விரிவு செய்யத்தெரிந்துகொள். “போல, புரைய, ஒப்ப, உறழ, மான, கடுப்ப, இயைய, ஏய்ப்ப, நேர, நிகர, அன்ன, இன்ன” சரி உவமை என்பது புரிகின்றது. அது என்ன உவமைத் தொகை என்பதுதானே உன் அடுத்த கேள்வி? வா… சொல்கிறேன். பன்னிரண்டாம் நாள் பாடத்தில் வேற்றுமைத்தொகை என்ப

இலக்கணம் கற்போம்…. பிழைகளைத் தவிர்ப்போம் – தொடர் _ நாள் 14

பதிநான்கு என்ன நண்பா நலம்தானே… நேற்றுப் பார்த்த விதிகளெல்லாம் மிகச்சுலபமாக இருந்திருக்கும் என்று நம்புகின்றேன். இன்றைக்கும் சுலபமான சில விதிகளைப் பார்க்கலாம். விதி15: ஓரெழுத்து ஒரு மொழிக்குப் பின் வல்லினம் மிகும்.        எ.கா.: பூப்பந்தல். அது என்ன ஓரெழுத்து ஒருமொழி என்று பயந்துவிடாதே….ஒரு சொல் என்பது பல எழுத்துக்கள் சேர்ந்தது என்று நீயறிவாய். அவை மட்டுமல்லாது ஒரு எழுத்து மட்டும் தனித்து நின்று பொருள் தருவதும் உண்டு. அவ்வாறு தமிழில் மொத்தம் 42 சொற்கள் உள்ளன. இவை ஓரெழுத்து ஒருமொழி என அழைக்கப்படும். இவ்வாறு வரும் ஒற்றை எழுத்துச் சொற்களோடு, வல்லினம் சேரும் போது அது மிகும் என்பதுதான் இந்த விதி. தமிழில் உள்ள 42 ஓரெழுத்து ஒரு மொழிச்சொற்களைக் கீழே கொடுத்திருக்கிறேன் நண்பா…. தெரிந்து கொள்… உன் அறிவினை விரிவு செய்துகொள். ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, கா, கூ, கை, கோ, சா, சீ, சே, சோ, தா, தீ, தூ, தே, தை, நா, நீ, நே, நை, நோ, பா, பூ, பே, பை, போ, மா, மீ, மூ, மே, மை, மோ, யா, வா, வீ, வை, வௌ, நோ, து   விதி 16: சால, தவ, தட, குழ என்னும் உரிச்சொற்களின் பின் வல்லினம் மிகும்             எ.கா.: சா

இலக்கணம் கற்போம்…. பிழைகளைத் தவிர்ப்போம் – தொடர் _ நாள் 13

பதிமூன்று என்ன நண்பா உற்சாகமாக உள்ளாயா…? வலிமிகுதலின் ஆறு விதிகளைப் படித்துப் புரிந்துகொண்டோம் என்ற மகிழ்ச்சியினை உணர்கின்றாயா…. வா…. இன்னும் சில விதிகளைப் பார்ப்போம். இன்றைக்கு வெகு சுலபமான, நேரடியாகப் புரிந்துகொள்ளக் கூடிய சில விதிகளைப் பார்த்துவிடலாம் நண்பா…. விதி 7: என, ஆக போன்ற சொல்லுருபுகளின் பின் வல்லினம் மிகும்.               எ.கா.: எனக்கூறினான், வருவதாகச்சொல் விதி 8: எண் பெயர்களில் எட்டு, பத்து ஆகிய இரண்டு பெயர்களில் மட்டும் வல்லினம் மிகும்                எ.கா.: எட்டுக்குதிரைகள், பத்துகாசு விதி 9: அப்படி, இப்படி, எப்படி ஆகிய சொற்களைத் தொடர்ந்து வல்லினம் மிகும்                எ.கா.: அப்படிக்காட்டு, இப்படிச்செய், எப்படித்தெரியும் விதி 10: திசைப்பெயர்களை அடுத்து வல்லினம் மிகும்                எ.கா.: கிழக்குக்கடல், மேற்குத்திசை, வடக்குப்பக்கம், தெற்குத்திசை விதி 11: அதற்கு, இதற்கு, எதற்கு என்ற சொற்களின் பின்னே வல்லினம் மிகும்.                 எ.கா.: அதற்குச்சொன்னேன், எதற்குத்தந்தாய், இதற்குக்கொடு விதி 12: இனி, தனி ஆகிய சொற்களின் பின் வல்லினம் மிகும்

இலக்கணம் கற்போம்…. பிழைகளைத் தவிர்ப்போம் – தொடர்_ நாள் 12

பன்னிரண்டு நேற்றைக்கு வேற்றுமை உருபுகள் பற்றிப் பார்த்தது அனைத்தும் நினைவில் உள்ளதா நண்பா…..? இல்லயெனில் கண்களை மூடி மீண்டும் ஒருமுறை நினைவு படுத்திக்கொள். செய்து விட்டாயா…? சரி இப்போதைக்கு இரண்டாம் வேற்றுமை மற்றும் நான்காம் வேற்றுமையினை மட்டும் ஞாபகம் செய். செய்துவிட்டாயா…? வா… வல்லினம் மிகுதலின் அடுத்த இரண்டு விதிகளைப் பார்ப்போம். விதி4: இரண்டாம் வேற்றுமை உருபான ‘ஐ’ வெளிப்படையாக வரும் இடத்தில் வல்லினம் மிகும் எ.கா.: அவனைப் பார்த்தேன் விதி5: நான்காம் வேற்றுமை உருபான ‘கு’ வெளிப்படையாக வரும் இடத்தில் வல்லினம் மிகும் எ.கா.: அவனுக்குத் தெரியும் சரியா….? இரண்டாம் வேற்றுமை உருபு ‘ஐ’ என உன் நினைவில் இருக்கும். அது ஆக்கல், அழித்தல், அடைதல், நீத்தல், ஒத்தல், உடைமை போன்ற பொருள்களில் வரும் என்பதும் உன் நினைவில் இருக்கும். சரிதானே …. இனி எங்கெல்லாம் ‘ஐ’ என்னும் இரண்டாம் வேற்றுமை உருபு வெளிப்படையாக வருகின்றதோ அங்கெல்லாம் மறக்காது ஒற்றினை இட்டு விடு… அடுத்து நான்காம் வேற்றுமை உருபு ‘கு’ என உன் நினைவில் இருக்கும். அது கொடை, பகை, நட்பு, தகவு, அதுவாதல், பொருட்டு, முறை, எல்ல

இலக்கணம் கற்போம்…. பிழைகளைத் தவிர்ப்போம் – தொடர் _ நாள் 11

பதினொன்று வா நண்பா… நலம்தானே…. வலி மிகுதலில் மூன்று விதிகளை நேற்றுப் பார்த்தோம். நினைவில் உள்ளதா…? இன்று அடுத்தடுத்த விதிகளைத் தொடர்வதற்கு முன் வேற்றுமை உருபுகளைப் பற்றி ஒரு சிறிய அறிமுகம் செய்துகொள்வோம். ஏனெனில் அடுத்த மூன்று விதிகளுக்கு இதுகுறித்த அறிமுகம் முக்கியம். கீழ்க்கண்ட வாக்கியத்தினைப் பார். “முருகனைக் கண்டான்” இதன் பொருள் என்ன..? யாரோ பெயர் குறிப்பிடப்படாத ஒருவன் முருகனைப் பார்த்தான் என்பதுதானே…. சரி, ஒருவேளை இதனைக் கீழ்க்கண்டவாறு எழுதினால் என்ன ஆகும்? “முருகன் கண்டான்” வாக்கியத்தின் பொருளே மாறிவிட்டது அல்லவா…? ‘ஐ’ என்ற உருபினை முருகன் என்ற பெயர்ச்சொல்லோடு சேர்த்ததன் மூலம் நாம் சொல்ல வந்ததைச் சரியாகச் சொன்னோம்   என்று புரிந்து கொண்டாய் அல்லவா…? இப்படி ஒரு பெயர்ச்சொல்லின் பொருளை வேறுபடுத்திக்காட்ட உதவும் உருபே வேற்றுமை உருபு என அழைக்கப்படுகின்றது. இது எட்டு வகைப்படும். அவை ஒவ்வொன்றைப் பற்றியும் மிகச் சுருக்கமாய்ப் பார்த்துவிடலாம் … வா… முதல் வேற்றுமை (அல்லது) எழுவாய் வேற்றுமை முதல்வேற்றுமைக்குத் தனி உருபு கிடையாது. ஒரு எழுவாய் இயல்பான பயனிலை கொ

இலக்கணம் கற்போம்…. பிழைகளைத் தவிர்ப்போம் – தொடர் _ நாள் 10

Image
பத்து வணக்கம் நண்பா….. ஒன்பது நாள் பாடங்களையும் முடித்துவிட்டு வெற்றியுடன் பத்தாம் நாள் சந்திக்கின்றோம். இன்றிலிருந்து நமது முக்கிய குறிக்கோளான பிழை திருத்தம் குறித்து நேரடியாகப் பார்க்க ஆரம்பிக்கலாம். பொதுவாக நம் பிழைகளை எழுத்துப்பிழை, சொற்பொருட்பிழை, சொற்றொடர்ப்பிழை மற்றும் பொதுவானபிழைகள் என்னும் நான்கு முக்கிய தலைப்புகளுக்குள் அடைத்துவிடலாம். எழுத்துப்பிழைகள் குறித்துதான் முதலில் நாம் பார்க்கப் போகின்றோம். எழுத்துப்பிழைகளை,   ஒற்றுப்பிழைகள்,   மயங்கொலிப்பிழைகள்,     குறில் நெடில் பிழைகள் மற்றும் துணையெழுத்துப்பிழைகள் எனப் பிரித்துக்கொள்வோம். ஒற்றுப்பிழைகள் என்பது தேவையான இடத்தில், தேவையான ஒற்றினை இடாமல் இருப்பதும் , தேவையற்ற இடத்தில் ஒற்றினைப் பயன்படுத்துவதுமாகும். மயங்கொலிப்பிழைகள் என்றால் ற-ர, ந-ன-ண, ல-ள-ழ   வித்தியாசம் தெரியாமல் பேசுவதும் எழுதுவதும் ஆகும். குறில் எழுத்துக்குப்பதில் நெடிலினைப் பயன்படுத்துவது, நெடிலுக்குப் பதில் குறிலினைப் பயன்படுத்துவது குறில் நெடில் பிழைகள் ஆகும். எடுத்துக்காட்டு: பள்ளிக்கூடம் – பள்ளிக்குடம்   (குடம் என்றால் தண்ணீர் நிரப்பும்

இலக்கணம் கற்போம்…. பிழைகளைத் தவிர்ப்போம் – தொடர் - நாள் 9

Image
ஒன்பது நலம்தானே நண்பா….. கடந்த எட்டு நாட்களாக நாம் எழுத்துக்களின் இலக்கணம் குறித்த அடிப்படை விசயங்களைப் பார்த்தோம். இனி நாம் சொற்கள் குறித்த சில அடிப்படை இலக்கணமும் தெரிந்து கொள்வது நலம். இன்றைக்கு நாம் திணை, பால், எண், இடம் ஆகியவை பற்றிய விளக்கத்தினைப் பார்ப்போம். இதனை எதற்காக இப்போது பார்க்கவேண்டும் என்று கேட்கின்றாயா…? சொல்கிறேன். எழுத்துக்களின் இலக்கணம் அறிவதன் மூலம் ஒற்றுப்பிழை, மயங்கொலிப்பிழை   முதலான எழுத்துப்பிழைகளைத் தவிர்க்க இயலும், சொற்களின் இலக்கணம் அறிவதன் மூலம் வாக்கியங்கள் அமைக்கும்போது நாம் ஏற்படுத்தும் பிழைகளைத் தவிர்க்க இயலும். முக்கியமாக, திணை, பால், எண், இடம் ஆகியன குறித்த முறையான அறிதல் இருந்தால் பெருவாரியான வாக்கியப்பிழைகளைத் தவிர்க்கலாம். வா….. ஒவ்வொன்றினைக் குறித்தும் பார்ப்போம். திணை   திணை என்பதற்கு ஒழுக்கம் என்று பொருள். இது உயர்திணை, அஃறிணை என்று இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒன்றும் குழப்பிக்கொள்ளாதே…. சுலபமாக ஞாபகம் வைத்துக்கொள்.       யார் என்ற கேள்விக்கு விடையாக வருவது உயர்திணை.       உதாரணம்: முருகன்        என்ன என்ற

இலக்கணம் கற்போம்…. பிழைகளைத் தவிர்ப்போம் – தொடர் _ நாள் 8

Image
எட்டு வணக்கம் நண்பா….. இன்றைக்கு முதல், இடை மற்றும் இறுதி நிலை எழுத்துக்களைப் பற்றிப் பார்க்கப்போகின்றோம். அதாவது ஒரு வார்த்தையின் முதலில், இடையில் மற்றும் இறுதியில் வரும் எழுத்துக்கள் எவை எவையென்று பார்க்கப்போகின்றோம். நாம் நேற்றுப் பார்த்த நட்பு எழுத்துக்கள் மற்றும் மெய்மயக்கத்தினை ஞாபகப்படுத்திக்கொள். அது இங்கே உனக்கு உதவும். முதலில், ஒரு வார்த்தைக்கு முதலில் வரும் எழுத்துக்கள் பற்றிப் பார்த்துவிடலாம். முதல் எழுத்து ஒரு சொல்லின் முதல் எழுத்தாக   மொத்தம் 22 எழுத்துக்கள் (வரிசை) மட்டுமே வரும்.                    உயிர் எழுத்துக்கள் பன்னிரண்டும் முதல் எழுத்தாக வரும்.                   மெய் எழுத்துக்கள் பதினெட்டும் தனி மெய் வடிவில் சொல்லுக்கு முதலில் வராது.                    உயிர் மெய்யில் க, ங, ச, ஞ, த, ந, ப, ம, ய, வ என்னும் பத்து வரிசையில் உள்ள எழுத்துக்களும் சொல்லின் முதலில் வரும். வரிசை என்று சொல்லும் போது அதில் உள்ள 12 எழுத்துக்களையும் குறிக்கும். ( உதாரணமாக க, கா, கி, கீ, கு, கூ, கெ, கே, கை, கொ, கொ, கௌ ஆகிய அனைத்தும் )                    உயிர் மெய்யில் ட, ண

இலக்கணம் கற்போம்…. பிழைகளைத் தவிர்ப்போம் – தொடர் _ நாள் 7

Image
ஏழு என்ன நண்பா…. உற்சாகமாக இருக்கிறாயா….? தமிழ் எழுத்துக்களின் அடிப்படை இலக்கணத்தைப் பார்த்துவிட்டோம். அடுத்ததாக சில முக்கிய விசயங்களையும் பார்த்து விட்டு, நமது இலக்கான பிழைதிருத்தம் பற்றிப் பேச ஆரம்பிக்கலாம். பொதுவாக, நாம் பேசும் பேச்சு வழக்குத் தமிழானது கொச்சைத்தமிழாகவே இருக்கிறது. ல கரம், ள கரம் போன்ற வேற்றுமைகளை நாம் முறையாக உச்சரிப்பதில்லை. அதன் காரணமாகவே நாம் எழுதும்பொழுது அதிகமான பிழைகளைச் செய்கின்றோம். ஏனெனில் நாம் எழுதும் ஒவ்வொரு வார்த்தையும், நம் மனதளவில் நமக்குத் தெரியாமலே அனிச்சையாக உச்சரிக்கப்படுகின்றது. அப்படி உச்சரிக்கும் வார்த்தைகளை நாம் சரியாக உச்சரிப்போமேயானால் நம்மால் பிழையின்றி எழுத முடியும். எனவே, எழுத்துக்களை உச்சரிக்கும் முறையினைக் கற்றுக்கொள்வது அவசியம். ஒவ்வொரு எழுத்தினையும் உச்சரிப்பதற்கு , பிறக்கும் இடமும் ( மார்பு, கழுத்து, தலை, மூக்கு), ஒலிப்பு முனைகளும் ( இதழ், நா, பல், அண்ணம்) அடிப்படையாய் இருக்கின்றன. ரெம்பவும் குழப்பிக்கொள்ளாதே நண்பா, கீழ்க்கண்ட சில விசயங்களை மட்டும் ஞாபகம் வைத்துக்கொள். Ø   உயிர் எழுத்துக்கள் 12 மற்றும் இடையின எழுத்