Posts

உணவும் உணர்வும்

உணவு என்பது உணர்வு சம்பந்தப்பட்டதா ….. என்னைக் கேட்டால் ஆமாம் என்பேன். இந்த உணவைத்தான் நீ உண்ணத் தகுதியுடையவன், உண்ண வேண்டியவன்  எனத் திணிப்பதுவும் வன்முறைதான்….. சில நேரங்களில் சில சம்பவங்கள் நிகழும்போது அது நமக்குப் பல விசயங்களைச் சொல்லிப்போய்விடுகின்றது.  2010 அல்லது 2011ஆம் வருடம் என்று நினைக்கிறேன். எனது பணி நிமித்தமாக அடிக்கடி விழுப்புரம் சென்று தங்குவது வழக்கம். அப்போது விழுப்புரத்தில் எனக்கு இருந்த பெரும் பிரச்சினை சாப்பாடுதான். ஒன்றிரண்டு கடைகள் தவிர எங்கும் சாப்பிட முடியாது. பெரும்பாலும்  பேருந்து நிலையத்தின் எதிரில் இருந்த ஒரு உணவகத்தில்தான்  ( விலை கொஞ்சம் அதிகமென்றாலும்) சாப்பிடுவேன். ஒருநாள் காலை அந்த உணவகத்தின் சிறப்பான வெண்பொங்கலை ருசித்துக்கொண்டிருந்தேன்.  எனது எதிர் இருக்கையில் ஒரு நடுத்தர வயதுடைய தம்பதியினர் வந்து உட்கார்ந்தார்கள். கொஞ்சம் கிராமிய சாயல் கொண்ட மனிதர்கள். உட்கார்ந்தவுடன் கணவர் மனைவியிடம் இட்லி சாப்பிட்டுக்கலாம் என்றார். சரியென்று தலையசைத்த அந்தப் பெண்மணி நான் பொங்கல் சாப்பிடுவதைப் பார்த்தவர் மெதுவாகக் கணவரிடம் பொங்கல் வேண்டும் என்றார்.  அந்தக் கணவர் ஒர

சிறுவாடு 6

 சிறுவாடு 6 இந்த தொடர் பதிவுகளை வாசித்து வரும் நண்பர் ஒருவர் என்னுடன் தொடர்பு கொண்டு நீண்டநேரம் உரையாடிக்கொண்டிருந்தார். உரையாடலின் முக்கிய சாராம்சம், முதலீடு பற்றிப் பேசுவதாகச் சொல்லி பங்குச்சந்தை குறித்துப் பேசிக்கொண்டிருப்பது பற்றியும், முதலீட்டின் அவசியம் பற்றியும், எனது சொந்த அனுபவத்தினைப் பற்றியும் இருந்தது. இந்தத் தொடர் பதிவுகளின் நோக்கம் என்பது வெவ்வேறு விதமான சேமிப்பு மற்றும் முதலீடுகளைப் பற்றி பேசுவதுதான்… பங்குச்சந்தை பற்றிய அடிப்படை அறிதல் இல்லாதவர்களும் அதனைப் புரிந்து கொள்ளவேண்டும், அதுவும் ஒரு முக்கியமான முதலீட்டு வழி என்பதனையும் தெரிந்து கொள்ளல் வேண்டும் என்பதற்காகவே அதனைப் பற்றி முதலில் பேச ஆரம்பித்தேன்.  ( பங்குசந்தை பற்றிய விரிவான நூலினைத் தனியாக வெளியிடுகிறேன்)  இதனைத் தொடர்ந்து மியூச்சுவல் ஃபண்ட், கடன் பத்திரங்கள், கிரிப்டோ கரன்சி ( ஆம்…. அதனைப் பற்றியும் தெரிந்து கொள்வோம்..) இன்னும் இன்னுமான முதலீட்டு முறைகளையும் பற்றிப் பேசலாம்….  அது மட்டுமல்ல, நம்மையறியாது நம் பாக்கெட்டிலிருந்து சில்லறை சில்லறையாக வெளியேறும் ( திருடப்படும் என்று கூடச் சொல்லலாம்) நம் பணத்தினையும

சிறுவாடு 5

  நீங்கள் இருக்கும் பகுதியில் சிறிய அளவில் ஒரு காய்கறிக் கடையினை நீங்கள் ஆரம்பிக்கலாம் என முடிவு செய்கின்றீர்கள்.  என்ன செய்வீர்கள்..? ஒரு மூட்டையை எடுத்துக்கொண்டு போய் மார்க்கெட்டில் கிடைக்கும் எல்லா காய்கறிகளையும் அள்ளிப்போட்டுக் கொண்டு வந்து விற்கப் பார்ப்பீர்களா…? அப்படிச் செய்தால் நீங்கள் போட்ட பணத்தினை திரும்ப எடுக்க முடியுமா…?  சந்தேகம்தான் இல்லையா… எந்த ஒரு விசயத்தினையும் பிளான் பண்ணி பண்ணணும்னு தலைவர் சொல்லியிருக்கார்ல…. அதுனால உட்காந்து பிளான் பண்ணுவீங்க…  முதல் விசயம் நம் கையில் எவ்வளவு பணம் இருக்கு…. இரண்டாவது விசயம் இடம்…. மூணாவது விசயம் நம் பகுதியில் இருக்கும் மக்கள் என்னென்ன காய்கறிகள் வாங்குவார்கள்…. தோராயமாக ஒவ்வொரு காய்கறியும் எவ்வளவு கிலோ விற்கும்….  இதெல்லாம்தானே அடிப்படையான விசயம். இதுவும் பங்குச்சந்தையும் ஒண்ணுதாங்க… முதலில் நீங்கள் எவ்வளவு முதலீடு பண்ணப் போறீங்க…. காய்கறிக்கடையில் எல்லாப் பணத்தையும் போட்டு விட்டு தினசரித் தேவைக்கு கையில் இல்லாமல் திண்டாட மாட்டீர்கள் இல்லையா… அது போல இங்கும் உங்கள் அனைத்து செலவு, சேமிப்புகள் எல்லாம் போக மீதியுள்ளதை முதலீடு செய்யவே

சிறுவாடு 4

  பண முதலீட்டினை பற்றிப் பேச ஆரம்பித்தவுடன் எல்லோரது மனதிலும் எழும் வார்த்தை பங்குச்சந்தை. அது ஒரு சூதாட்டம் என்று பயமுறுத்தும் சிலரிலிருந்து, நான்லாம் ஒரு நாளைக்குப் பத்தாயிரம் பார்க்குறேன் என்று சொல்லித்திரியும் சிலர் வரை, நம்மை ஒரு குழப்பத்திலேயே வைத்திருக்கிறார்கள். என்னோடு பணி புரிந்த நண்பர் ஒருவர் கேட்டார்…. யப்பா அது என்னவோ பெட்டி பெட்டியா ஒரு வரைபடம் போட்டு வச்சுருக்கானுகளே… அது என்னன்னு புரிஞ்சுகிட்டா ஒரு நாளைக்கு சர்வ சாதாரணமா ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கலாம்ல …. எனக்கு அத மட்டும் சொல்லிக்கொடு.  முதன்முதலில் பங்குச்சந்தை பற்றி எனது நண்பர் ஸ்ரீதர் எனக்குச் சொல்லிக்கொடுத்தபோது கூட நானும் அப்படித்தான் யோசித்தேன். ஒரு நாளைக்கு ஆயிரம் சம்பாதிக்கணும்.  நான் என் கையில் இருக்க நகையெல்லாம் அடமானம் வெச்சு பங்குச்சந்தையில் போடறேன்…. ஒரு வருசத்துல இரட்டிப்பாக்கிட மாட்டேனா… ?...... என் வேலைப்பளு தாங்க முடியல, வேலைய ராஜினாமா பண்ணிட்டு முழுநேரம் டிரேடிங்க் பண்ணுனா ஒரு நாளைக்கு ஆயிரம் ரூபாய் கிடைக்காதா…?.... நான் நட்டதும் ரோஜா இன்றே பூக்கணும்னு சொல்ற அளவுக்குப் பொறுமை இல்லாதவரா…? உட்கார்ந்து ஒவ்

சிறுவாடு 3

 பணத்தினை நேர்மையான முறையில் பெருக்க நிறைய  வழிகள் கொட்டிக் கிடக்கின்றன என்று சொன்னேன்….. என் நண்பர் ஒருவர் சொன்னார்…. நான் இரண்டு இன்சுயூரன்ஸ் பாலிசிகள் எடுத்துள்ளேன்… ஒரு லைப் இன்சுயூரன்ஸ் மற்றும் ஒரு டேர்ம் இன்சுயூரன்ஸ். போதாக்குறைக்கு ஒரு மெடிக்கல் இன்சுயூரன்ஸ் எடுத்துள்ளேன்… வேறு என்ன முதலீடு செய்ய வேண்டும் …? இன்சுயூரன்ஸ் என்பது சேமிப்பு அல்லது முதலீடு என்று உங்களுக்கு யார் சாமி சொன்னார்கள் என்று கேட்டேன்.  உண்மையில் இன்சுயூரன்ஸ்  என்பது முதலீடு என்றுதான் இன்றைக்கும் நிறைய நண்பர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இன்சுயூரன்ஸ் என்பது நிச்சயமாய் முதலீடு கிடையாது. இன்சுயூரன்ஸ் ஒரு பெரிய கடல், அதனைப் பற்றி இன்னொரு பதிவினில் இன்னும் விபரமாய்ப் பேசுவோம். நான் ஏற்கனவே சொன்னபடி முதலீடு என்பது நம் பணத்தினைப் பெருக்கச்செய்வது. சில நாட்களுக்கு முன்னால் வாட்ஸ் ஆப்பில் ‘வாரன் பஃபெட்’ சொன்னதாக ஒரு வாசகம் வந்தது, “நீ தூங்கும்போது உன் பணம் உனக்காகச் சம்பாதிக்க வில்லையென்றால், நீ சாகும்வரை உழைத்துக் கொண்டேதான் இருக்கவேண்டும்” உண்மையான வார்த்தைகள்.  பொதுவாக நம் ஊரில் பணம் செய்வது பற்றிப் பேசினால்

சிறுவாடு - 2

  ஒரு சில வருடம் முன்பு நானும் நண்பர்கள் சிலரும், ஒரு கடையில் மாலை வேளைகளில் வழக்கமாய் வடை சாப்பிடுவோம். அற்புதமான சுவையில் இருக்கும். ஒரு வடையில் ஆரம்பித்தது, அதன் சுவைக்கு அடிமையாகி ஆளுக்கு மூன்று , நான்கு எனக் கணக்கில்லாமல் போக ஆரம்பித்தது.  ஒரு கட்டத்தில் அது உடம்பினைக் கெடுக்கும் அளவிற்குப் போய்விட, அன்றிலிருந்து வடை சாப்பிடுவதை விட்டு விடலாம் என முடிவு செய்தோம். நண்பர்களில் ஒருவர்  இதனால் அவருக்கு ஒரு மாதத்திற்கு 300 ரூபாயாவது மிச்சம் ஆகிறது என்றார். நான் சிரித்துக் கொண்டே ஆமாம் ஆமாம் இதனைக் கொண்டு பங்குச் சந்தையில் போடுங்கள் எனக் கிண்டலாகச் சொன்னேன். அவ்வளவுதான் பிடித்துக் கொண்டார். நண்பா எனக்கும் பங்கு வர்த்தகம் செய்ய ஆசை... ஆனால் எல்லோரும் அது சூதாட்டம் அது இதென்று பயமுறுத்தி அதைச் செய்யவிடாமலே ஆக்கி விட்டார்கள். உனக்கு அது பற்றித் தெரியும் அல்லவா, எனக்குச்  சொல்லிக்கொடு என்று அனத்த ஆரம்பித்து விட்டார்.  ஆனால், நான் சில தனிப்பட்ட காரணத்தினால் அப்போது அதிலிருந்து வெளியில் வந்து வெகு காலம் ஆகியிருந்தது. வேறு வழியின்றி, அவருக்காகச் சில அடிப்படை விசயங்களைச் சொல்லிக் கொடுத்து, ஒரு

சிறுவாடு

  இந்த முழு அடைப்புக்காலம் நிறைய விசயங்களை நம்மைச் சந்திக்க வைத்திருக்கின்றது.  முக்கியமாய் பெரும்பான்மையான மக்கள் சந்தித்திருப்பது நிதி சார்ந்த பிரச்சினைகள்தான்.  ஒரு எதிர்பாராத இடர்வரும்போது அதனை எதிர்கொள்வதற்கு, நாம் எந்த அளவிற்குத் தயாராய் இருக்கின்றோம் என, இந்தக்காலமானது நமக்கு சுயதரிசனம் காட்டியிருக்கின்றது.  முன் தலைமுறையில் இல்லாத நுகர்வுக் கலாச்சாரத்தினை இப்போது நாம் அனுபவிக்க ஆரம்பித்துவிட்டோம். தேவையோ இல்லையோ எல்லாப் பொருட்களையும் வாங்கிக் குவித்துள்ளோம்.  இந்த முழு அடைப்புக்காலம் வந்தவுடன் நாம் அனைவரும் யோசித்தது அடுத்த மாத இ.எம்.ஐ. பற்றித்தான். முழுச்சாப்பாடு இல்லையெனினும் கஞ்சி குடித்து வாழ்ந்து விடலாம் என்ற தைரியம் இருந்தாலும், இ.எம்.ஐ. மட்டும்தான் பூதத்தினைப் போல முன் நிற்கின்றது.  இப்போது நம்மை அறியாமலே நாம் அறிந்து கொண்டிருக்கும் ஒரு முக்கியமான விசயம், நம்மிடம் என்ன சேமிப்பு உள்ளது என்பது….. எனக்குத் தெரிந்து எனது சுற்று வட்டத்தில் இந்தக் கேள்வியைக் கேட்டு தன்னைத் தானே துப்பிக்கொண்டவர்கள் பெருவாரியானவர்கள். ஐந்து இலக்கத்தில் சம்பாதிக்கும் சிலரும், மிஞ்சிப்போனால் இரண்ட