இலக்கணம் கற்போம்…. பிழைகளைத் தவிர்ப்போம் – தொடர் _நாள் 22

இருபத்தியிரண்டு

என்ன நண்பா… நலம்தானே…. இதுவரை நாம் பார்த்த வலி மிகா இடங்களின் விதிகள்  புரிந்திருக்கும் என்று நம்புகிறேன்…

இன்றைக்குச் சில எளிமையான விதிகளைப் பார்க்கலாம்.

விதி 12: அவ்வளவு, இவ்வளவு, எவ்வளவு ஆகிய சொற்களின் பின் வல்லினம் மிகாது

        எ.கா.: அவ்வளவு பெரியது, இவ்வளவு தாகமா?, எவ்வளவு சப்தம்.

விதி 13: அத்தனை, இத்தனை, எத்தனை ஆகிய சொற்களின் பின் வல்லினம் மிகாது

        எ.கா.: அத்தனை சிறியது, எத்தனை பெரியது, இத்தனை காசுகளா?

விதி 14: அவ்வாறு, இவ்வாறு, எவ்வாறு ஆகிய சொற்களின் பின் வல்லினம் மிகாது

         எ.கா.: அவ்வாறு சொன்னான், இவ்வாறு கூறினான், எவ்வாறு போவான்

விதி 15: அத்தகைய, இத்தகைய, எத்தகைய ஆகிய சொற்களின் பின் வல்லினம் மிகாது.

       எ.கா.: அத்தகைய கவிதைகள், இத்தகைய கதைகள், எத்தகைய காட்சி

விதி 16: அப்போதைய, இப்போதைய, எப்போதைய ஆகிய சொற்களின் பின் வல்லினம் மிகாது

       எ.கா.: அப்போதைய காட்சி, இப்போதைய தவிப்பு, எப்போதைய பாடம்

விதி 17: அப்படிப்பட்ட, இப்படிப்பட்ட, எப்படிப்பட்ட ஆகிய சொற்களின் பின் வல்லினம் மிகாது

        எ.கா.: அப்படிப்பட்ட காட்சி, இப்படிப்பட்ட கவிதை, எப்படிப்பட்ட கதை

விதி 18: நேற்றைய, இன்றைய, நாளைய ஆகிய சொற்களின் பின் வல்லினம் மிகாது

         எ.கா.: நேற்றைய சண்டை, இன்றைய காலை, நாளைய தவிப்பு

எல்லா விதிகளும் எளிமையாகப் புரிந்திருக்கும் என்று எண்ணுகிறேன் நண்பா…

நாளை மீண்டும் தொடர்வோம். காத்திரு

- நா.கோபாலகிருஷ்ணன்

Comments

Popular posts from this blog

Preparing a book in Kindle direct publishing

உணவும் உணர்வும்

சிறுவாடு