Posts

Showing posts from October, 2020

யாதும் ஊரே யாவரும் கேளிர்

  இலக்கியம் என்பது வாழ்வினைச் சார்ந்தது என்று கூறாமல் கூறியவர்கள்   நம் முன்னோர்கள். வாழ்வின் நிகழ்வுகளை அகம் புறம் எனப்பிரித்து அதன் அடிப்படையில் இலக்கியம் வரைந்தவர்கள். புற வாழ்க்கையின் சிறப்பினைப் பேசும்   தமிழ் இலக்கியத்தின் மிக முக்கியமான ஒரு பெருமை வாய்ந்த நூல் புறநானூறு.   புறநானூற்றின் 192 வது பாடல், கணியன் பூங்குன்றனார் எழுதிய பாடல், ஒரு நிறை வாழ்விற்கான அர்த்தம் சொல்லும் பாடல். உலகம் முழுதையும் ஒன்றெனக் காணக் கூறும் பாடல்.     “யாதும் ஊரே யாவரும் கேளிர் தீதும் நன்றும் பிறர்தர வாரா நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன சாதலும் புதுவது அன்றே, வாழ்தல் இனிதென மகிழ்ந்தன்றும் இலமே முனிவின் இன்னா தென்றலும் இலமே, மின்னொடு வானம் தண்துளி தலைஇ யானாது கல் பொருது மிரங்கு மல்லல் பேரியாற்று நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர் முறை வழிப் படூஉம் என்பது திறவோர் காட்சியில் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின் பெரியோரை வியத்தலும் இலமே, சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே” -           எல்லா ஊர்களும் எனது ஊர். எல்லா மக்களும் எனது உறவினர். தீமையும் நன்மையும் பிறரால் வருவதில்லை. துன்பமும் ஆறுதலும் கூ

செம்புலப்பெயனீர்

 தமிழ் இலக்கியத்தினைப் படித்தவர்கள் அறிந்திருக்கலாம், காதலைப் பாடும் தமிழ்ச் செய்யுள்களின் போதையினை. . . . மனதைத்திருடிப்போகும் அவ்வாறான செய்யுள்களில் இன்றளவும் என் மனதளவில் முதலிடத்தில் நிற்கும் பாடல்... "யாயும் ஞாயும் யாராகியரோ?  எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்?  யானும் நீயும் எவ்வழி யறிதும்?  செம்புலப் பெயனீர் போல  அன்புடை நெஞ்சம் தாங்கலந் தனவே" குறுந்தொகையின் 40 வது பாடல் இது. தலைவன் பிரிந்து போய்விடுவானோ என்று சஞ்சலப்படும் தலைவியினை தேற்றுவதற்காகத் தலைவன் பாடுவது போல எழுதப்பட்ட பாடல்.  என் தாயும் உன் தாயும் எவ்வாறு உறவினர்?.... என் தந்தையும் உன் தந்தையும் எந்த முறையில் உறவினர்கள்? நீயும் நானும் ஒருவரையொருவர் எவ்வாறு அறிந்து கொண்டோம்? செம்மண்ணில் கலந்த மழை நீரினைப்போல நமது அன்பு நெஞ்சங்கள் கலந்துள்ளன. செம்புலப் பெயனீர் என்னும் சொல்தான் இந்தச் செய்யுள் காலம் கடந்தும் நிற்க ஒரு காரணம். மழை நீர் செம்மண்ணில் கலந்து ஓடுவதைக் கவனித்திருப்போம். ஒன்றுடன் ஒன்று கலந்து பிரிக்க இயலாமல் கலந்திருக்கும். ஒன்றுடன் ஒன்று கலந்த இரண்டு அன்பு நெஞ்சங்களுக்கு அதனை உவமைப் படுத்தியதில் இர